பாலகுமாரன் பக்கங்கள் 10:
பாலகுமாரன் பக்கங்கள் 10:
உள்ளம் கவர் கள்வன் – கற்றுக் கொடுத்தவை
காதல் என்பது
எது வரை ? கல்யாண காலம் வரும் வரை.
கல்யாணம்
என்பது எது வரை ? கழுத்தினில் தாலி விழும்
வரை
தாலிதான்
கல்யாணமா? குடித்தனம் நடத்துவது கல்யாணமில்லையா?
குழந்தை
பெறுதலா ?
படிப்பு,
பண்பு சொல்லித்தருதல் விசேஷமில்லையா? பருவத்தின்
வியப்புக்களைப் போதிக்க வேண்டாமா? ஒவ்வொரு கல்யாண சந்தோஷமாய் குடித்தனம் பண்ண முடியாதா?
உலக ஈர்ப்பு எல்லாம் அடங்கி அறுபதாம் கல்யாணமும் சதாபிஷேகமும் உறவி, நட்பை, ஸ்நேகத்தைப்
பலப்படுத்தாதா? தொடர்ந்து சாகிற வரை காதலித்தால் தினம் தினம் சந்தோஷம் கை கூடாதா?
கல்யாணம்
என்பது என்னவென்று யாருக்கும் புரியல்லையா? கல்யாணம் என்பது என்ன? நீ என் மனைவி, என்னில்
சரி பாதி. நான் உன் புருஷன். உன்னால், உன்னில் முழுமையானவன். இதைக் காதலில்லாமல் எப்படி
ஸ்ய்ய முடியும் > காதலற்று செய்வதில் என்ன லாபம்?
எதிராளி கத்தி வைத்திருந்தால் நீயும் கத்தி வைத்துக்
கொள். தெளிவுள்ளவனுக்கு கத்தியும், கவசமும் கூட சமாதானக் கருவிகள்
அலட்சியப்படுத்த அலட்சியப்படுத்த எதிராளி
அதிகம் நெருங்குவான்,
திறமையை மட்டம் தட்ட மட்டம் தட்ட அதிக
ரோஷம் காட்டுவான்.
எதிரி நெருங்கியது குளிப்பாட்டு ரோஷமுற்றதும்
பாரமேற்று.
உதவிக்கு வந்தவனை உதவி பெறும் வரை உறவாகக்
கொள்.
கடவுள் என்பது
மோகவலை. உடம்பு மயக்கம், பொருள் தீனி கேட்கும்
அகோரப்பசி . நெஞ்சு வெப்பம் பொங்கிப் பொங்கி உடல் முழுவதும்வழிவடஹை தெளிவாய் உணர முடிகிறது.
இந்த வெப்பத்தில் என்னென்னவோ மாறுதல்கள் நிகழ்கின்றன. கால்கள் வலுவிழந்து போகின்றன.
கண்களில் பரவுகிறது. தொடைகளில் இறுக்கம் நிலவ, தோள்களை யாரோ அழுத்தும் உணர்வு வருகிறது.
இடுப்பில் நெகிழ்வு கூடுகிறது. மார்புகளில் திண்மை வருகின்றது. வயிறு குழைகிறது. மூச்சில்
ஹிம்சை நோகிறது. விரல்கள் தவிக்கின்றன. பிடறி வியர்க்கிறது. தன் கன்னத்தைத் தானே இழுத்து
கிள்ளிக் கொள்ளத் தோன்றுகிறது. உதடு கனிந்து போகிறது. ஹா ஹா ஹா என்று மனசு இடம் தெரியாமல் அலைகிறது. எதிலும் ஒட்டாமல் படபடக்கிறது. சார்பில்லாமல் உறுதியாய் நிற்க முடியவில்லை. ஜன்னல்
கம்பிகளை இறுகப் அற்றிக் கொள்ள தோன்றுகிறது. அதில் கன்னம் இழைத்து நிற்கும் ஆசை வருகிறது.
மொத்த உடம்பும் ஜன்னல் சட்டத்தில் அழுந்தப் பதிந்து இழைய இழைய இன்னும் படபடப்பு கூடுகிறது.
காதல் என்பது
உடம்பு மயக்கம், காதல் என்பது மோக வலை. ஒரே மூச்சில் வலையை அறுத்துப் போட்டு விடலாம்.
அப்படி செய்ய இஷ்டமில்லை. இது பிடித்திருக்கிறது. வலையில் அகப்பட்ட மான் குட்டி எல்லா
இழுவை முயற்சியும் செய்து விட்டு, பேசாமல் மயங்க மயங்க நிற்குமே அந்த நிலை துவக்கத்திலேயே
வந்து விட்டது. மிரண்டு தவித்த கன்றுக் குட்டியை கழுத்தைச் சொறிந்து விட, தலை சாய்ந்து நிற்குமே அனத அசமந்தம் வந்து விட்டது.


No comments:
Post a Comment