பாலகுமாரன் பக்கங்கள் 12:
பனி விழும் மலர் வனம் – கற்றுக் கொடுத்தவை
வாழ்க்கை
டிராக் போட்ட மாதிரி இல்லை. அது ஒரு காடு திசை தெரியாத பாதை இல்லாத காடு. எது வேணா
எப்ப வேணா, யாருக்கு வேணும்னாலும் நடக்கலாம். மரம் முறிஞ்சு விழலாம். புலி பாஞ்சு அறையலாம்.
எதுக்கும் தயாரா இருக்கத் தெரியாதவரை பெண்கள் கஸ்டடில இருக்கற சாமான்கள்தான். கால்நடைகள்
தான்.அப்புறம் ஆம்பிளை டாமினேஷன்னு வெட்கமில்ல்லாம குரல் மட்டும் கொடுக்கறதுல என்ன
பிரயோசனம்?
“இங்கே தனித்து நிற்றல் எப்படி சாத்தியம்? வாழ்க்கைக்காடு
மாதிரி இருக்கிறது என்கிறாள் நாடு. அதனால்தான் ஒருவரையொருவர் சார்ந்திருக்கிறேயோ ?
கை கோர்த்தபடி போகிறோமோ ? பயம்தான். குடும்பமா? அச்சத்தினால்தான் கூட்டு வாழ்க்கையா?
ஆனால் குடும்பம்தான் பயமுறுத்துகிறது. பலத்தை வெற்றி கொள்ள முடியாமல் போகிறது. தனிமையைத்
தவிர்க்க திருமணத்தாலேயே தனிமை. இப்பேர்ப்பட்ட சிக்கல் பயத்தத் தவிர்க்க குடும்பம்
குடும்பமே பயமுறுத்தும்”
போர் குளத்து முதுகைக் கூழாங்கல்லால்
குத்திக் கிளறுவதை நிறுத்து.
அடங்கின நெஞ்சில்
ஆசைகள் எறிந்து
ஆட்டம் பார்ப்பது அசிங்கம்
யாரும் அறியாது கெட்டிக் கரை உடைக்க
வட்டச் சிற்றலையால் முடியாது.
ஓடுகால் நதியல்ல
எறிந்தாலும் சிலுக்கென்று
சிரித்து விட்டுப் போக.
இது குளம். சலனத்தை
சல்லாபத்தால் மறைக்கத் தெரியாத ஜடம்.
பல் காட்டும் உன் பட்டணக் கரை
அலைவரிசையில் நின்று உன் வரிசை காடு.
இடுப்பு நனைய இளித்து நில்.
எழுந்து போ.
என்னையும் குளத்தையும்
விட்டு.
வண்ணத்துப்
பூச்சி:
எழுதி முடிக்கப்பட்ட
ஒரு காதல் கடிதம்
விலாசம்
தேடித் தவிக்கிறது.
விட்டில் பூச்சிகள் :
முட்டி முட்டி பால் குடிக்கின்றன
நீலக் குழல் விள்க்கில்
விட்டில் பூச்சிகள்
… தேன் எப்படிக்
குடிச்சாலும் தித்திப்புத்தான் அப்படி எந்த நேரத்திலும் சுவையை உணர்ந்து சந்தோஷ்மாய்
இருக்கறதுதான் சரி. எலிங்கற அறுப்புலேர்ந்து தப்பிக்க முடியாது. கடவுள்ங்கிற புலியை
எதிர்க்க முடியாது. நரகத்திலேர்ந்து தப்பிக்க முடியாது. என்னதான் செய்வான் மனுஷன்.
தேனை ருசிக்கரதுதான் சரி. தேனுக்கு ஆசைப்படறதுதான் சரி. ஐயே இப்பப் போய் தேன் சொட்டரதேன்னு
அழறதுதான் பாவம். மரணம் நிச்சயம் மௌனி. காலம்ங்கற எலி நம்ம உயிர்க் கொடிய அறுத்துண்டே இருக்கு.
…”புனிதாவுக்கு காயம் படக்கூடாதுங்கற கவலைதான்
அதிகம் வந்தது எனக்கு… பிகாஸ்….பிகாஸ்…”
“யூ லவ் புனிதா வெரிமச். இல்லையா
? நீங்க செய்தது சரி. காதல் என்பது விட்டுக்
கொடுத்தல். சில சமயம் காதலையே விட்டுக் கொடுத்தல்”
“ நேசிக்கறவங்களை
சிரமத்துல, ஏடுபடுத்த முடியாத நிலைதான். அன்பு, காதல் எல்லாம்.”.

No comments:
Post a Comment